Friday, March 16, 2012

தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவில்  தேய்பிறை அஷ்டமி ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை




தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தராஜ பெருமாள் கோவிலில் ஒவொருமாதமும் தேய்பிறை அஷ்டமியின் முதல் நாள் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சிறப்பு பூஜை ஐந்து கால பூஜையாக நடத்தப்பட்டு வருகிறது .

இதன் தொடர்ச்சியாக இம்மாத சிறப்பு பூஜை 15.03.2012 அன்று நடந்தது.  இதில்  கலந்து கொண்ட பக்தர்களால் வழங்கப்பட்ட அபிஷேக பொருட்களை கொண்டு பால் அபிஷேகம் , தேன் அபிஷேகம் , சந்தன அபிஷேகம் , மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது .

ராஜ அலங்காரம்

இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவரவருக்கு  பக்தர்களால் வழங்கப்பட்ட மலர் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது .  இதன் பின்னர் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளினார் .

சிறப்பு பூஜையில் ஏராளமான தொழில் அதிபர்கள் , முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் தரிசித்து சென்றனர் .


நன்றி!



No comments: