Wednesday, August 31, 2011

தோஷம் போக்கும் பைரவர்:



ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. காலபைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது.

எமபயம் தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

Tuesday, August 30, 2011

சந்தோஷம் தரும் சொர்ண ஆகர்ஷன பைரவர்



சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.

இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். இதுதவிர, சொர்ண ஆகர்ஷ்ன பைரவருக்கு நடைபெறும் சகல அபிஷேக, அலங்கர பூகைளில் கலந்து கொண்டு பிராத்திப்பதன் மூலம் அவரது முழுமையான அணுகிரகத்தை அடையலாம்.

அப்போது பால்,தேன்,இளநீர், பன்னீர், திருமஞ்சன பொடி , மஞ்சள்,சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூக்கனையும் சொர்ண ஆகர்ஷன பைரவரின் பூஜைக்காக கொடுப்பது நல்லது.

இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், செவ்வரளிப் பூக்களைக் கொண்டு பூஜை நடத்தப்படும் போதும்,பைரவர் திருமந்திரத்தை மனதில் பிரார்த்தித்து, கோரிக்கைகளை சொர்ண  ஆகர்ஷன பைரவரிடம் சமர்ப்பித்தால் பிராத்தனைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.

மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.

Monday, August 29, 2011

கோட்டை பைரவர்



 ‘திருமயம்’ தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்குள்ள சத்தியகிரீசுவர் ஆலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை. இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் உடைய ஆலயம் இது. உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கிய சிற்பம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு முன்பாகவே இந்த திருத்தலம் தோன்றியதாக ஐதீகம்.

இங்குள்ள மலைக் கோட்டையைக் காவல் காக்கும் பைரவர் தான் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகின்றார். கோட்டை முனீசுவரர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் நின்ற திருக்கோலம், நாக சூல பாசங்களை ஏந்தியுள்ளது போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பைரவர் என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இவர், இந்த மலையையும், ஆலயத்தையும், இந்த ஊரையும் காப்பதாக ஐதீகம். கோட்டையின் வடக்கு வாசலில், வட புறத்தைப் பார்த்தவாறு காட்சி அளிக்கின்றார். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்து பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்.

Sunday, August 28, 2011

வடுக பைரவர்



ஆகாயம், பூமி, பாதளம் என மூன்று நிலைகளில் காணப்படும் ஒரே ஆலயம் பிரான்மலை கொடுங்குன்ற நாதர் ஆலயம் தான். வள்ளல் பாரி ஆண்ட பறம்பு மலையே தற்போது பிரான் மலை என போற்றப்படுகின்றது.

இங்கு மங்கைபாகர் சன்னதி ஆகாய நிலையில் விளங்குகின்றது. இது மேல் பகுதியில் விளங்குகின்றது.

வடுகபைரவர், விநாயகர் மற்றும் தஷிணாமூர்த்தி சன்னதி பூமி என்ற நிலையில் காணப்படுகின்றது. அதாவது ஆகாயநிலைக்குக் கீழே, பாதாள நிலைக்கு மேலே நடுத்தரமாகக் காணப்படுகின்றது.

அதன் கீழே கொடுங்குன்ற நாதர் சன்னதி காணப்படுகின்றது. இது பாதாள நிலை எனக் கூறலாம்.

இந்த நடுத்தரமான பூமி நிலையில், சூலம், உடுக்கை, கபாலம், நாகபாசம் போன்றவற்றைக் கொண்டவராக விளங்குகின்றார் இந்த வடுக பைரவர்.

வடுகன் என்றால் பிரம்மச்சாரி என்ற பொருள் உண்டு. வீரன் என்ற பொருளும் கூறப்படுகின்றது. அதற்கேற்றால் போல் சற்று உக்ரமான தோற்றத்துடன் காணப்படும் இவருக்கு, வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளது. நின்ற திருக்கோலம். அரசர்களால் வழிபாடு செய்யப்பட்டதால் வீரத்தின் அடையாளமான வாள் சார்த்தி வைக்கப்படுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மற்றொரு கதையும் உண்டு. முண்டாசுரன் என்னும் அரக்கன், சிவனைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவில்லை என்ற வரம் பெற்றதால், ஆணவத்துடன் அனைவரையும் கொடுமைப் படுத்தினானாம். பிரம்மனையே அவன் போருக்கு அழைக்க, அவன் செருக்கை அழித்து அவனை அழிக்க, சிவன் ஏற்ற திருக்கோலமே ஸ்ரீ வடுகபைரவராம்.

நன்றி ! ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

பைரவாஷ்டமி பெருமை



அஷ்டமிப் பெருமை: சித்திரை மாத நவமி ராமருக்கும், ஆவனி மாத அஷ்டமி கிருஷ்ணருக்கும், மார்கழி மாத மூலம் ஆஞ்சநேயருக்கும், மாசி மாத அமாவாசை சிவனாருக்கும் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுவது போல் கார்த்திகை மாத அஷ்டமி பைரவாஷ்டமி என்று மிகச் சிறப்பாக எல்லா சிவத்திருவாலயங்களிலும் அவரது திருவவதாரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளே. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறக்க வாழலாம்.

மேலும் ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் உண்டு.

 மார்கழி - சங்கராஷ்டமி, 
தை - தேவதேவாஷ்டமி, 
மாசி  மகேஸ்வராஷ்டமி, 
பங்குனி - திரியம்பகாஷ்டமி, 
சித்திரை - ஸ்நாதனாஷ்டமி, 
வைகாசி - சதாசிவாஷ்டமி, 
ஆனி - பகவதாஷ்டமி, 
ஆடி - நீலகண்டாஷ்டமி, 
ஆவணி - ஸ்தானுஅஷ்டமி, 
புரட்டாசி - சம்புகாஷ்டமி, 
ஐப்பசி - ஈசானசிவாஷ்டமி, 
கார்த்திகை - காலபைரவாஷ்டமி.

மேலும் காலபைரவாஷ்டமி எமவாதனை நீக்கும் மஹாதேவாஷ்டமி ஆகும். பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.

நன்றி ! ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

சக்தி பீட காவலர் பைரவர்



சக்தி பீட காவலர்: தாட்சாயணி தேவி, தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர் பாகத்தை தராது அவமதித்ததால், தட்சனின் மகளான பார்வதி தேவியாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது, அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெலாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச்செய்தார் என்றும், தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும், அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

நன்றி ! ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

Saturday, August 27, 2011

காக்கும் தெய்வம் கால பைரவர்




காவலுக்கு அதிபதி: சிவபெருமான் தட்சணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்க மூர்த்தி அருவ வழிபாட்டிற்கும், பைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறார்கள்.
பஞ்ச குமாரர்கள்: சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது.



லிகாலத்தில் நம்மைக் காப்பதற்காகட்டும், செல்வ வளங்களை வழங்குவதற்காகட்டும், இரண்டுக்கும் பைரவ வழிபாடு மிகச் சிறந்தது. பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குப் பகுதியிலே நிர்வாணமாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் மேல்நோக்கிய அக்னி ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைச்சந்திரன் அலங்கரிக்க, இருகோரைப்பற்கள் வெளியே தெரிய, இடுப்பில் நாகங்களை அணிந்து, கரங்களில் சூலம், பாகம், டமருகம் தாங்கி, பாதங்களில் தண்டை அணிந்து உக்ர ரூபத்துடன் காவல் தெய்வமாய் நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிப்பவர் காலபைரவர், காலச் சக்கரத்தின் அதிபதியும் இவரே.



ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இவர் காக்கும் தெய்வம் காலபைரவர்.

Friday, August 26, 2011

சொர்ணாகர்சன பைரவ மந்திரம்


சுவர்ணாகர்சன பைரவ மந்திரம்
ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ


பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் பொற்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தினுள்ளே எழுந்தருளியுள்ள பைரவர் சுவர்ணாகர்சன பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

உற்சவத்திருமேனியாக உள்ள இப்பைரவப் பெருமான் நிர்வாண கோலத்தில் நின்றவாறு மேற்கரங்களில் பாசம், டமருகமும், கீழ்கரங்களில் சூலம், கபாலமும் மேல்நோக்கிய அக்னி கேசத்துடன் அவருடைய இடப்பாகத்தில் அடியார்களை நோக்கியவாறு உள்ள நாய் வாகனத்துடன் திருக்காட்சியளிக்கிறார்.

இவருக்கு இங்கே உச்சிக்காலத்தில் நெய், பால், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து நெய்யில் செய்யப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.

முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை. அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம். பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம்.

சுவர்ணாகர்சன மந்திரம்
ஸ்வர்ணகால பைரவம் திரிசூலயுக்த பானினம்
வேத ரூப ஸார மேல ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரிதேஷூ ஸர்வதா ஸமஸ்த்வஸ்து தாயினம்
மகீந்த்ரீவம்ச பூர்வ புண்ய ரூபிஸம் ஸமாச்ரயே

சுவர்ணாகர்சன பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டம், பெளர்ணமி, பிரதோஷகாலம், திங்கட்கிழமை சந்தியாகாலம், திருவாதிரை நட்சத்திர நாள் உகந்த நாட்கள்.

சம்பங்கி மாலை, தாமரைப் புஷ்பமாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை, அணிவித்து வாசனை மலர்களாலும் செவ்வரளி, ரோஜா மஞ்சள் செவ்வந்தி, மரு, மரிக்கொழுந்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். மல்லிகை மலரை பைரவ வழிபாட்டில் தவிர்க்கவும்.

நைவேத்தியமாக வெல்லப் பாயசம், சர்க்கரைப்பொங்கல், நெய்யில் சுட்ட வடை, அவல் பாயாசம், பானகம், சம்பா அரிசிச் சாதம், பழங்கள், தேன், பால் படைத்து வழிபாடு செய்ய அனைத்து வளங்களும் இல்லம் தேடி தானாய் வரும்.

சுவர்ணாகர்சன பைரவரை வழிபட விரும்புபவர்கள் இவரது திருவுருவப் படத்தை குபேரனின் திசையான வடக்கு திசையில் வைத்து, வடக்கு  நோக்கி அமர்ந்து பூஜிக்க சர்வ தனங்களையும் ஆகர்சித்து வழங்குவார்.


சுவர்ணாகர்சன தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசூலம் வரம் கைரை:
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த சுவர்ணவர்ஷனம்
சுவர்ணாகர்சனம் பைரவம்
ஆஸ்ரயாம்யஹம்.

நன்றி ! பைரவர் ஃபவுண்டேசன் 

செல்வம் தரும் சொர்ண பைரவர்

சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார்.

“சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர்.
“ஸ்ரீதத்துவநிதி” என்னும் நூலில் சொர்ணாகர்சன பைரவர் பொன்னிறம் கொண்டவர். மஞ்சள் நிறப் பட்டாடைகளை அணிந்தவர். மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவர். நவரத்தின மணிகள் இழைத்த பொன்னாலான அட்சயப் பாத்திரம் ஏந்தியவர். சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றைத் தரித்தவர். அனைத்து தேவாதி தேவர்களாலும் போற்றப்படக்கூடியவர். எல்லையில்லா ஆனந்தத்திலிருப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர் என்றும்,
“ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரகோசம்” என்ற நூலில் சுவர்ணாகர்சன பைரவமூர்த்திக்கான மந்திரம், யந்திரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுவர்ணாகர்சன பைரவர் மடியில் அமர்ந்திருக்கும் பொன் நிறமாகப் பிரகாசிக்கும் தேவியை ஸ்வர்ணா என்றும சுவர்ணபைரவி என்று அழைத்தும் சகல அணிமணிகள் பூண்ட இவள் பொன் கொட்டும் சூடம், தாமரை, அபய முத்திரை தரித்தவளாகவும் பைரவரைத் தழுவிக் கொண்டு இடது பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் அடியார்களுக்கு செல்வம் அனைத்தும் தருபவளாகவும் விளக்கப்பட்டுள்ளது.
ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது மஞ்சள் பட்டு உடுத்தி, விலையுயர்ந்த அணிமணிகளை அணிந்து, நவரத்ன கிரீடம் சூடி, செந்நிற மேனியராய், அன்றலர்ந்த தாமரை போல் புன்னகை பூக்கும் திருமுகத்துடன், பொன்னிற முடியில் சந்திரனைச் சூடி, சுந்தரரூபனாக கரங்களில் தாமரை, பொன்மணிகள் பதித்த கங்கம், அமுதக்கும்பம், அபய, வரத முத்திரைகளுடன் பொன் பொழியும் குடந்தனை கரத்தில தாங்கி மறுகரத்தால் தம்மைத் தழுவும் ஆதிசக்தியான சர்வ சக்தி வாய்ந்த புன்முறுவர் பூத்த முகத்தினனாய் பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் துழுவியவர் என்று விளிக்கிறது. சிவசக்தி வடிவில் உள்ள ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவரை உள்ளன்போடு வணங்கி வர சகல செளபாக்கியங்களும் தானாய் இல்லம் வந்து சேரும் என்று ஸ்ரீதேவி மாாத்மியம் கூறுகிறது.

நன்றி ! பைரவர் பவுண்டேசன் 


Tuesday, August 16, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 4




திருப்பத்தூர் என்ற பெயர் வந்ததற்கான காரணம்
கொள்ளையனாக இருந்த வால்மீகி, தன் தவறை உணர்ந்து சிவபெருமானை நினைத்து பைரவர் இருக்கும் இடத்தில் தவம் செய்தார். பல வருடங்களாக தவம் செய்ததால் வால்மீகி முனிவர் உடலை கரையான் புற்று கட்டியது. இனியும் வால்மீகியை சோதித்து அமைதியாக இருப்பது நன்மையல்ல. என்று ஈசன் கருதி வால்மீகிக்கு நேரில் காட்சி தந்து, “வால்மீகி” என்று முதலில் சிவபெருமான்தான் அவருக்கு பெயர் வைத்து அழைத்தார். சிவனின் குரல் கேட்டு வால்மீகி முனிவர் புற்றை உடைத்து கொண்டு வெளியே வந்தார்.
“வால்மீகி நீ புற்றில் இருந்து வந்ததால் உன் பெருமை நிலைத்து இருக்க, இந்த இடம் புத்தூர் என்ற பெயர் பெறட்டும்.” என்றார் சிவபெருமான். அதுவே இன்று திருப்பத்தூர் என்று நாம் அழைக்கிறோம்.

கோயில் உருவான கதை
அரசர் ஒருவர்  நாய் வாகனம் இல்லாத யோகபைரவர் இருப்பதாக கேள்விப்பட்டு இந்த காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தார். யோக பைரவரை கண்ட அரசர், இறைவனுக்கு திருக்கோயில் கட்டினார்.
பரிகாரம்
தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையில் இருந்து விடுதலை அடைய யோக பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையில் இருந்து விடுதலை பெறவும், திருமணம் நடக்கவும் இந்த யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். நல்ல வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் 9 வாரம் யோக பைரவருக்கோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் பைரவர் கோயிலுக்கோ, சூரியனுக்கு உகந்த ஞாயிற்று கிழமையில் விளக்கு ஏற்றலாம். திருமணம் தடைப்பட்டவர்கள் 9 வாரம் செவ்வாய் கிழமை ராகு காலத்தில் தீபம் ஏற்றினால் நல்ல வரன் அமையும்.  

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

Sunday, August 14, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 3


சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர்.
பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் உருவான கதை
சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் முனிவர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று எங்களை காப்பாற்றுமாறு முறையிட்டார்கள். மனம் இறங்கிய ஈசன், “கவலை வேண்டாம். எந்த ஒரு செயலுக்கும் காரணம் இருக்கும். அதனால் நீங்கள் கவலையடைய வேண்டாம். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய ஒருவன் வருவான்.” என்று கூறி தன் சக்தியால் பைரவரை உருவாக்கி அசூர சகோதரர்களிடம் அனுப்பினார் சிவபெருமான்.
ஈசனின் தூதுவராக வந்த பைரவரை சட்டை செய்யவில்லை அசூரர்கள். இதனால் பெரும் கோபம் கொண்ட ஈசன், தூதுவராக முன்பு அனுப்பிய பைரவரையே போர் வீரனாக அனுப்பி அசூர சகோதரர்களை கொன்று வீழ்த்தினார். சிவபெருமானின் உத்தரவின் பேரில் அசூரர்களை கொன்றாலும் உயிர்களை கொன்ற பாவத்தால் பைரவரை பிரம்ஹத்தி தோஷம் பிடித்து கொள்கிறது.
இந்த தோஷத்தில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சிவனிடம் முறையிட்டார் பைரவர். “நீ கொன்றைமர காட்டு பகுதிக்கு சென்று என்னை நினைத்து தவம் செய். உன் தோஷம் நீங்கும். அத்துடன் உன்னை உலகமே வணங்கும். உன்னை வணங்குபவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது அருள் செய்.” என்றார் சிவபெருமான். சிவனின் உத்தரவு படி கொன்றைமர காட்டு பகுதிக்கு வந்த பைரவர் அமைதியாக தியானம் செய்தார். இதன் பலனாக பைரவருடைய தோஷம் நீங்கியது. அத்துடன் சிவ அருளால் பல யோகங்களையும் பெற்றார். இதனால் தேவர்கள் பைரவரை யோகபைரவர் என்று புகழ்ந்தார்கள்.
பைரவரின் மகிமை
சனிஸ்வரரை யமதர்மராஜன் மிகவும் அவமானப்படுத்திவிடுகிறார். இதனால் மனம் வருந்தி தன் தாய் சாயாதேவியிடம் முறையிடுகிறார் சனி. “கலங்காதே. சிங்கத்துக்கு நேரம் கெட்டால் நரி கூட நீதிபதியாகும். இது இயற்கை. அதனால் நீ யமனை வெற்றி பெற பைரவரை வணங்கு. எல்லாம் நன்மையாக அமையும்.” என்றாள். தாய் கூறியது போல் சனிபகவான் பைரவரை வணங்கினார். பைரவரின் ஆசியை பரிபூரணமாக பெற்ற பிறகு யமதர்மராஜானே சனி பகவனை பார்த்து மரியாதை செலுத்தும் படியாக உயர்ந்தார். இதன் பிறகு சில காலம் கழித்து ஈஸ்வரரை பிடிக்க முயன்ற சனி, சனிஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனிஸ்வர பகவான்.   
இதன் பிறகு நவகிரகங்களான சூரியன் முதல் கேது பகவான் வரை பைரவர் பல துணை பெயர்களில் கிரகங்களின் சக்தியாக இருக்கிறார். காட்டில் முனிவர்கள் எந்த இறைவனை தவம் செய்வதாக இருந்தாலும் முதலில் பைரவரை வணங்கிய பிறகுதான் இறைவனையே வணங்குவார்கள். “எப்படி கண்களை  இமை காக்கிறதோ, அதுபோல் பைரவர் இமையாக இருந்து தன்னை வணங்கும் பக்தர்களை காப்பார்.” என்கிறார் வால்மீகி முனிவர்.

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

Wednesday, August 10, 2011

ஸ்ரீ யோக பைரவர் - 2


பூதகங்களின் அதிபதியாக பூதநாதனாக இருக்கும் பைரவர் சிரமாலையும், கரகபாலமும், சூலமும், கையில் ஏந்திய காலபைரவர் ஞானநிலை காண எண்ணங் கொள்கிறார்.  பைரவரின் எண்ணம் ஈடேற பைஅரவம் சூடிய கயிலைநாதன் "கொன்றைவனம் (திருப்பத்தூர்) நீ தவம் புரிய ஏற்ற இடம்" என மகிழ்ந்து கூற பைரவரை எம்பெருமான் கந்தவேல் (முருகன்) அழைத்து வருகிறார்.  அவர் (பைரவர்) காசியில் இருந்து கொணர்ந்த வில்வம் காசி வில்வம என இங்கு உள்ளது.  தன கோரநிலையை விடுத்தது,  கௌரிக்காக தாண்டவமாடிய ஸ்ரீ நடராஜப் பெருமானின் வடபால் சர்வ சித்திபூமி எனும் இடத்தில மேற்கு முகமாக தனிக்கோயில் கொண்டுள்ளார் பைரவர். பாதம் இரண்டையும் பிணைத்து பெருவிரல்களால் பூமியை ஊன்றிய கோலத்தில், இருகாற்குதியையும் சகனத்தில் வைத்துள்ளார்.  ஜடாமகுடமும், நுதல் விழியில் அக்னியை ஒடுங்கி காதுகளில் சுருள்தோடும் உத்பலமும் உடையவரானார்.  வக்கிர தந்தங்களும், புன்னகையும் ஒளிர்கின்ற முகத்துடன் திகழ்கின்றார்.

............... தொடர்ந்து ஸ்ரீ யோக பைரவரை அடுத்த பதிவிலும் வழிபடுவோம்!

நன்றி!