Tuesday, December 9, 2014

தீராத பண நெருக்கடியில் உள்ளவர்கள் தினசரி பராயணம் செய்ய வேண்டிய பதிகம்

தீராத பண நெருக்கடியில் உள்ளவர்கள் கீழ்கானும் பதிகத்தினை
எம்பெருமான் ஸ்ரீ கால பைரவன் முன் தினமும் மனம் உருகி 
பாடி வரவும்..நிச்சயம் தீர்வு உண்டு.


வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே 
 
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் 
கறைகொள் காசினை முறைமை நல்குமே 
 
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் 
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே 
 
நீறுபூசினீர் ஏறதேறினீர் 
கூறுமிழலையீர் பேறும் அருளுமே 
 
காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே 
 
பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே
 
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே 
 
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே 
 
அயனு மாலுமாய் முயலு முடியினீர் 
இயலு மிழலையீர் பயனும் அருளுமே 
 
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே
 
காழி மாநகர் வாழி சம்பந்தன் 
வீலிமிழலைமேல் தாழும் மொழிகளே !!!!
 
பைரவரருள்
நன்றி ! ஆன்மீக அரசு


Thursday, November 13, 2014

மகா கால பைரவாஷ்டமி

14-11-2014:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தை அளிப்பவர்—பயத்தை

போக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீ.ரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.

அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்து

நான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்

மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).

கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.

இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்

விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.

பைரவார்க்கியம் க்ருஹாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.

ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.

புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..

ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.

பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.

Tuesday, October 7, 2014

7 நாட்களும் ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள்


காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. 

காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. 

* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். 

* திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். 

* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும். 

* புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். 

* தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். 

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். 

* சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நன்றி ! மாலை மலர் 

Thursday, September 4, 2014

பெருவாழ்வு கிட்டும் பைரவர் வழிபாடு

பைரவப் பெருமானை காலையில் வணங்கினால் சர்வ நோய்கள் நீங்கும். நண்பகலில் வணங்கினால் சித்திகள் கிட்டும். மாலையில் வழிபட்டால் சகல பாவங்களும் விலகும்.
அர்த்த சாமத்தில் வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.
பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் தயிர் சாதம் தேன் செவ்வாழை வெல்லப் பாயாசம் அவல் பாயாசம் உளுந்து வடை சம்பா அரிசி சாதம் பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது உத்தமம்.
பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. பால் தேன் பன்னீர் பழரசம் அபிஷேகமும் மிக விஷேடம்.
இதில் வாசனை திரவியங்களான புனுகு அரகஜா ஜவ்வாது கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது.

Sunday, August 24, 2014

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது


பைரவரை வழிபடும் முறை :

நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
பைரவருக்கு 21 சனி கிழமை பூசணி யில் விளக்கு போட வேண்டும் , கடைசி நாள் மட்டும் தயிர் சாதமும் , வடைமாலையையும் நிவேதனமாக படைங்க ன்னு சொன்னார் .


இந்த வழிபாடு ஏற்பட போகும் உயிர் இழப்பையே தடுக்க கூடிய சக்தி வாய்ந்தது

(சுவாமிக்கு நிவேதனமாக படைக்கும் படையல் எதையும் நாமே வீட்டில் தயாரித்து கொடுக்க கூடாது , அதை அந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகர் / பூசாரி தான் தயாரிப்பார் நாம் அதற்க்கு ஆகும் செலவை மட்டுமே ஏற்க்க வேண்டும் )

இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம், அப்படி தொடர்ந்து சனிக்கிழமையும் விளக்கு போட முடியாமல் தடை வந்தால் எதாவது ஒரு நாள்ல விளக்கு போட்டுக்கலாம்

நான் ரொம்ப நாள் கழித்து என் குருநாதர் சாய்பாபா உபாசகர் கிட்ட என் பிரச்னையை பத்தி சொல்லி வருத்தப்பட்டேன் , அதற்க்கு அவர் வருத்தபடாதிங்க ,உங்க வீட்டுக்கு பக்கத்துல எதாவது பைரவர் கோவில் இருக்கா ன்னு கேட்டார் , இருக்கு சார் ன்னு சொன்னேன் அந்த பைரவருக்கு தினமும் ஒரு விளக்கு போட்டுக்கிட்டு வாங்க ன்னு சொன்னார் , சார் ஏற்கனவே பூசணியில 21 சனி கிழமை விளக்கு போட்டு , கடைசி நாள் தயிர் சாதமும் , வடை மாலையும் பண்றப்போ தப்பா பண்ணிட்டேன் , அதனால ஏற்பட்ட பாதிப்பே இன்னும் நீங்க வில்லையே அதனால பைரவருக்கு விளக்கு போட பயமாயிருக்கு சார் ன்னு சொன்னேன் .
உங்களால அதை பண்ண முடியாதுன்னு தெரியும் அதனால தான் தினமும் ஒரு சாதாரணமான விளக்கு போடுங்க போதும் ன்னு சொன்னார் , சார் இப்போ எத்தனை நாள் விளக்கு போடணும் ன்னு கேட்டேன் , ஒரு ரெண்டு மாசம் போடுங்களேன் ன்னு சொன்னார்

திடீர்ன்னு என்ன நினைச்சேன் தெரியலை , சார் நான் உயிரோட இருக்கறவரைக்கும் தினமும் பைரவருக்கு விளக்கு போடறேன் சார் ன்னு சொன்னேன் , ரொம்ப சந்தோசம் , கண்டிப்பா பண்ணுங்க எல்லா பிரச்சனைக்கும் கண்டிப்பா ஒரு தீர்வு இருக்கும் , நல்லாயிருபீங்க பைரவருக்கு விளக்கு போட ஆரம்பிங்க ன்னு சொன்னார் அவர்
பாத்துக்குவார் சொன்னார்

நான் குருநாதர் கிட்ட கேட்ட அந்த நாள் பௌர்ணமி. ஊருக்குள்ள இருக்கற இன்னொரு சிவன் கோவிலில் இருக்கற பைரவருக்கு பகல் முழுக்க எரிகிற மாதிரி விளக்கு போட ஆரம்பிச்சேன் , அதே சமயம் வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பைரவர் கோவிலில் இரவு முழுக்க எரிகிற மாதிரி விளக்கு ஏற்றி வந்தேன் , எனக்கு HANS ( புகையிலை ) போடற பழக்கம், சிகரெட் குடிக்கற பழக்கம் இருந்தது , விளக்கு போட ஆரம்பிச்ச 8 ஆம் நாள்ல HANS ( புகையிலை ) போடறப்பெல்லாம் நெஞ்சை அடைக்கிற மாதிரி இருந்தது , உயிர் பயம் வந்தது ( பத்து வருட போதை பழக்கத்தை ) உடனே நிறுத்திட்டேன் , ரெண்டு நாள் கழிச்சி தேய்பிறை அஷ்டமி வந்தது , பூஜை முடிஞ்சதுக்கப்பறம் , குருநாதர் கிட்ட போன் பண்ணி ரெண்டு கோவில்ல விளக்கு போட்டுக்கிட்டு இருக்கேனே அதனால ஏதும் பிரச்னை வருமா ன்னு கேட்டேன்

அப்படியெல்லாம் ஒண்ணும்மில்லை , எல்லா பைரவரும் ஒன்னுதான் எல்லாருக்கும் ஒரே சக்திதான் அதனால எங்கே , எந்த பைரவருக்கு விளக்கு போட்டாலும் ஒரே மாதிரி பலன்தான் ன்னு சொல்லிட்டு, பைரவருக்கு விளக்கு போட ஆரம்பிச்சாலே இந்நேரம் நன்மை ஏற்பட்டிருக்கனுமே ன்னு சொன்னார் , ( அதாவது பத்து வருச போதை பழக்கத்தை கை விட்ட விஷத்தை மறைமுகமாக சொன்னார் )

அடுத்த தேய்பிறை அஷ்டமிக்கு பைரவருக்கு வடைமாலை சாற்றலாம் ன்னு கோவில் பூசாரிகிட்ட பணம் கட்டினேன் , அன்னைக்கின்னு ஒரு கெட்ட விஷயம் அஷ்டமி பூஜைக்கு போக முடியலை

அடுத்த அஷ்டமி பூஜைக்குகாவது பைரவருக்கு வடைமாலை சாற்றலாம்னு கோவில் பூசாரிகிட்ட பணம் கட்டி, குடும்பத்தோட பூஜையிலும் கலந்துகிட்டோம் , பைரவருக்கு சாற்றிய வடை மாலைல பாதி வடையை திருப்பி கொடுத்துட்டாங்க , எங்க அப்பா அம்மாவும் அதை வாங்கி சாமி ரூம் ல வச்சிட்டாங்க ,
இந்த அஷ்டமியோட சிகரெட் புடிக்கிற பழக்கத்தையும் விட்டிட்டேன்


சரி குருநாதர் சொன்ன ரெண்டு மாசம் விளக்கு போடுங்க ன்னு சொன்னாரே ன்னு அவர் கிட்ட பூஜை முடிஞ்சி போன் பண்ணப்போ
தேவையில்லாம நீங்களே போய் சிக்கல் ல மாட்டிகிட்டிங்ன்களே ன்னு சொன்னார் , என்னக்கு என்னன்னு புரியலை ஆனா பூஜையில தான் எதோ பிரச்னை ன்னு புரிஞ்சது , அடுத்த நாள் ஆஞ்சநேயர் கோவில்ல போய் பிரார்த்தனை பண்ணிவிட்டு நேர வீட்டுக்கு சாமி ரூமுக்கு வந்தப்போ தான் தெரிஞ்சது , பைரவருக்கு சாற்றிட்டு வாங்கிவந்த பாதி வடையில கிட்டத்தட்ட முக்கால்வாசி வடை பூசனம் பூத்த மாதிரி ஆயிடுச்சு , இத தான் குருநாதரும் சொல்லியிருப்பார் ன்னு எல்லாவடையும் அன்னைக்கு நைட்டுகுள்ள சாப்பிட்டு முடிச்சிட்டேன்

(ஏற்கனவே ஒருமுறை 21 சனிகிழமை பூசணி ல விளக்கு போட்டு , கடைசி நாள் பைரவருக்கு வடைமாலையும் , தயிர் சாதமும் நைவேத்தியமா குருநாதர் பண்ண சொன்னப்போ, கடைசி நாள் வழிபாட்டை ரொம்ப தவறா செய்து உயிர் இழப்பை சந்தித்தேன் ,அதற்க்கப்பரம் சிவன் கோவிலுக்கே போக கூடாது , எந்த சூழ்நிலையிலும் பைரவரை பார்க்கவே கூடாது ன்னு 2 வருஷமா இருந்தேன் - திரும்பவும் அதே மாதிரி தவறு ஏற்படவும் , எனக்கு குருநாதர் மேலயும் , பைரவர் மேலயும் பயங்கரமான கோபம் , திரும்ப திரும்ப என்னை பைரவர் கிட்ட மாட்டிவிடுறாரே ன்னு )

மத்த கடவுள் வழிபாடு எப்படின்னு தெரியலை , பைரவர் வழிபாட்டுல பைரவருக்கு படைக்கிற எதையும் வீணாக்க கூடாது , அலட்சிய படுத்த கூடாது , காரணம் இந்த வழிபாடு ஏற்பட இருக்கும் உயிர் இழப்பை தடுக்க கூடிய சக்தி கொண்டது , அதனால இது சாதாரண விஷயம் இல்லை .

என் நண்பன் ஒருத்தன் கிட்ட வேதனையோட இந்த விசயத்த சொன்ன பொது ( அவனும் குருநாதரை சந்தித்து வந்தவன் , அவர் சொன்ன பரிகாரத்தை செய்து இன்றைக்கு அரசு வேலைல இருக்கான் ), எல்லாத்தையும் மறந்துவிடு , நேர அதே சிவன் கோவிலுக்கு போ , முன்னாடி இருக்கற விநாயகருக்கு ஒரு தேங்காயைய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி , பைரவர்கிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டு விளக்கு போட ஆரம்பி , எல்லாம் சரியாயிடும் ன்னு சொன்னான் ,

நேரா ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் , ஒரு தேங்காய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி , இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்துங்க, அதுவரைக்கும் தினமும் விளக்கு போட்டுட்டு வர்றேன் ன்னு பிரார்த்தனை பண்ணிட்டு , நரசிம்மர் கோவிலுக்கு போய் தாயார் கிட்ட வேண்டிகிட்டு , நரசிம்மரை
தரிசிக்கும் பொது , நரசிம்மருக்கு தயிர் சாதத்தை படைச்சிகிட்டு இருந்தாங்க , நரசிம்மர் தரிசனம் முடிஞ்சு , வெளியே வந்தப்போ தயிர் சாத பிரசாத்தை முதல் ஆளா எனக்கு கொடுத்தாங்க . அங்கிருந்து நேர சிவன் கோவிலுக்கு போய் விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சி , ஒரு விளக்கு ஏத்தி இனிமே கடவுள் வழிபாட்டுல எந்த பிரச்னையும் ஏற்படாம இருக்கணும்னு வேண்டிகிட்டு ஒரு விளக்கு ஏத்தி , பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு விளக்கு போட ஆரம்பிச்சேன் , விளக்கு போட்டு வெளியில வந்தப்போ அங்க ஒரு பெரிய பாத்திரத்துல பால் வச்சிக்கிட்டு என்னை பார்த்ததும் ஒரு டம்ளர் மொண்டு கொடுத்தாங்க , என்னென்னு கேட்டேன் , இன்னைக்கு பிரதோஷம் இது சிவனுக்கு அபிஷேகம் செய்த பால் குடிங்க ன்னு சொன்னாங்க , குடிச்சிட்டு சிவனை வெளியில இருந்து வணங்கிட்டு , என் டூவீலர் பக்கம் வந்தப்போ ஒரு பிச்சை எடுக்கற அம்மா என் கிட்ட வந்து , எப்பவும் துணைக்கு கூட ஒருத்தரை வச்சிக்க உனக்கும் ஒரு குறையும் வராது ன்னு சொல்லிட்டு என்கிட்டே இருந்து பிச்சையை கூட கேக்காம போயிடுச்சு .

சரி இனிமேல் பைரவருக்கு வடைமாலை , தயிர் சாதம் ன்னு நைவேத்யம் பண்ற வேலையே வேண்டாம் , தினமும் காலையும் , மாலையும் விளக்கு மட்டும் ஏத்துவோம் ன்னு முடிவு பண்ணிட்டேன்

இருந்தாலும் பயம் மட்டும் போகலை , அதே சிந்தனையாவே இருந்தேன் அடுத்த வாரம் BANK EXAM , ஏற்கனவே செய்துகிட்டு இருந்த வேலையும் போயி 5 மாசமா சும்மா இருந்தேன் , GOVERNMENT JOB தான் சரி ன்னு BANK EXAM க்கு தயார் பண்ணிக்கிட்டு இருந்தேன் , இந்த டென்சன் ல PREPARE பண்ற எண்ணமும் போச்சு , விரக்கதி மன நிலையிலேயே இருந்தேன்


பரிச்சைக்கு முதல் நாள் பைரவர் வழிபாட்டு பிரச்சனையால மனசு சரியில்லன்னு தற்செயலா பாபா வழிபாட்டு மன்றத்துக்கு போனேன் ,பாபா வுக்கு ஆரத்தியும் பூஜையும் பண்ணிக்கிட்டு இருக்கோம் முடிஞ்சதுக்கபரம் போங்க ன்னு 1 மணி நேரம் உக்கார வச்சிட்டாங்க , இதுவரைக்கும் 2 நிமிசத்துக்கு மேல நான் அங்க இருந்ததே இல்லை , எதோ கடமைக்கு அடுத்த நாள் போய் பரிட்சை எழுதிட்டு வந்தேன் , பரிட்சை முடிஞ்சு வெளியே வர்றப்போ நண்பர் ஒருத்தர்போன் பண்ணி நீங்க ஊருக்கு வந்த வுடனே என்னை வந்து பாருங்க ன்னு சொன்னார் , எதோ முக்கியமான விஷயம் ன்னு நினைச்சி அவரை போய் பார்த்தேன் , அவர் ஒண்ணுமில்லைங்க ஷீரடி சாய்பாபா விபூதி ரெண்டு பாக்கெட் கொடுக்கத்தான் கூப்ட்டேன் ன்னு சொல்லி கொடுத்தார் , அவர் மாச மாசம் எனக்கு ஒரு பாக்கெட் விபூதி கொடுப்பார்


ரெண்டு மாசம் கழிச்சி exam ல pass ன்னு result வந்தது , ஏற்கனவே போன வருஷ பரிட்சையிலும் பாஸ் பண்ணினேன் , +2 ல மார்க் கம்மிங்கரதால எந்த interview போக முடியலை , இதுவும் அப்படித்தான் இருக்கும் இனிமே BANK வேலையே வேண்டாம் ன்னு , நண்பனோட அறிவுரைப்படி TNPSC க்கு தயார் ஆனேன் , மறுபடியும் ரெண்டு மாசம் கழிச்சு
திடீர்ன்னு interview call letter வந்தது , எனக்கு மிக பெரிய சந்தோசம்
கிட்டத்தட்ட 9 வருஷ முயற்சி , INCOME TEX , AUDIT ன்னு 6 வருஷம் அந்த பரிட்சைகெல்லம் தயார் பண்ணி தோல்வி அடைஞ்சு , bank பரீட்சைக்கு 3 வருஷமா தயார் ஆகி, சரி இதுவும் நமக்கு கிடைக்காது , TNPSC யாவது முயற்சி செய்வோம் ன்னு போனப்போ இப்படி ஒரு letter வரவும் தலை கால் புரியலை , குருநாதருக்கு போன் போட்டு நன்றி சொன்னேன் , அடுத்து உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் , அப்புறம் வேலைதான் சொல்லிட்டு வாழ்த்தினார் , எனக்கு interview வரைக்கும் போனதே பெரிய விஷயம் தான் .

interview க்கு போறதுக்கு முதல் நாள் நாமகிரி தாயார் கிட்ட வாங்குற முதல் மாச சம்பளத்துல தாயாருக்கு நகை செய்யறதா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் interview hall க்கு உள்ள போறதுக்கு முன்னாடி குருநாதர் கிட்ட போன் போட்டு ஆசிர்வாதம் வாங்கினேன் , interview ல 4 பேர் இருந்தாங்க அதுல 3 வதா இருந்தவர் என்னை கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தாயாரை பற்றிதான் கேட்டார் ராமனுஜம் பத்தி கொஞ்சம் சொல்லிட்டு தாயாருடைய பெருமைகளை அவர் கொஞ்ச நேரம் சொல்லிக்கிட்டு இருந்தார் , interview முடிஞ்சு வெளியே வந்து குருநாதருக்கு போன் பண்ணி , நான் 2 வருசத்துக்கு முன்னாடி என் சுயநினைவை இழந்து மாந்திரீகம் கத்துக்க இந்த வழியா போனேன் , இப்போ வாழ்க்கைய தேடி இந்த வழியா போறேன் , இப்படி ஒரு முன்னேற்றத்துக்கு நீங்க தான் காரணம் , நீங்க இல்லன்னா நான் இறந்து போய் கூட 2 வருஷம் ஆகியிருக்கும்ன்னு நன்றி சொன்னேன் .

அங்கிருந்து நேர பைரவர் கோவிலுக்கு வந்து விளக்கு போட்டு நன்றி சொல்லணும் ன்னு வந்து , பைரவருக்கு விளக்கு போட்டு தலையை நிமிர்ந்து பார்த்தா பக்கத்துல என் எதிரி நின்னுகிட்டு இருந்தான் , நான் மாந்திரீகம் ன்னு தேடி போக அவனும் ஒரு முக்கிய காரணமா இருந்தவன் , எனக்கு மறுபடியும் பைரவர் மேல கோபம் , இதுக்கு மேல என்ன விளக்குபோட்டு என்ன ஆக போகுது , ஒரு வாரமா பைரவருக்கு விளக்கு போடலை ,

கோவில் பக்கத்துல ஒருத்தர் மன நிலை சரியில்லாம இருந்தார் , நாம ஏன் கோவில் , கடவுள் ன்னு திரும்ப திரும்ப துன்பத்த அனுபவிக்கனும் , பேசாம மனநிலை சரியில்லாம சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம இருக்கிற இவரோட பசி போக்கலாம் , விளக்கு போடற செலவுக்கு இவருக்கு சாப்பாட்டுக்கு செலவு பண்ணிட்டு போயிடலாம் , அப்படின்னு அவருக்கு காலைலயும் , இரவுலயும் சாப்பாடு வாங்கி கொடுக்க ஆரம்பிச்சேன்

இந்த ஒரு வாரத்துல மனநிலை ஆஞ்சநேயர் மேல தீவிரமா மாறி போச்சு , தினமும் காலைல 10:30 டு 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிசேகம் நடக்கும் , அந்த அபிசேகத்துல கலந்துகிட்டேன் , தினமும் 1/2 லிட்டர் பால் வாங்கி கொடுப்பேன் , கடைசியா நம்ம மேல தீர்த்தம் தெளிப்பங்க , அப்பறம் கிளம்பிடுவேன் .


ஒரு வாரம் கழிச்சு திடீர்ன்னு ஒரு சிந்தனை , குருநாதர் பைரவர் தான் எனக்கு உயிர் வாழ்றதுக்கான ஒரே ஆதாரம் ங்கற மாதிரி சொல்லுவார் , இந்த மாதிரி சின்ன விசயத்துக்காக கோவிலுக்கு போகாம இருக்க கூடாது , ஒரு வேளை இதுவும் ஒரு தடையாக கூட இருக்கலாம் , நம்மளோட மோசமான கர்ம வினையா இருக்கலாம் ன்னு , விநாயகரை வணங்கி பைரவர் கிட்ட மன்னிப்பு கேட்டு மறுபடியும் விளக்கு போட ஆரம்பிச்சேன் , அதே சமயம் , அந்த மன நிலை சரியில்லாதவருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கரதையும் நிறுத்தலை , ஆஞ்சநேயருக்கு பாலபிசேகம் பண்றதையும் நிறுத்தலை.

இதுக்கு நடுவுல interview மார்க் கும் வந்தது , cutoff ல எனக்கு ஒரு மார்க் பத்தலை , மறுபடியும் விரக்தி , கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாத மாதிரி போச்சு , சரி நமக்கும் தோல்வி ஒன்னும் புதுசு இல்லையே 9 வருசமா தோத்துக்கிட்டு தானே இருக்கோம் ன்னு சமாதானமாயிட்டேன் , இவ்வளவு தூரம் வந்ததே பெருசு , அடுத்த முறை பாத்துக்கலாம் ன்னு விட்டுட்டேன் ,
ஆஞ்சநேயர் கிட்டயும் , தாயார் கிட்ட மட்டும்தான் வேலைய பத்தி வேண்டியிருந்தேன் ,


ஒரு வாரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகாம இருந்தேன் , அப்பறம் அது தப்புன்னு மனசுக்கு பட்டது , மறுபடியும் வணங்க ஆரம்பிச்சேன்


ரெண்டு மாசம் கழிச்சு 2 வதா ஒரு cutoff மார்க் விட போறதா தகவல் வந்தது , point புள்ளி 40 மார்க் குறைஞ்சது , என் மார்க் லிஸ்ட் ல வந்துடுச்சு ,


ஒரு நாள் bank ல வேலை கிடைச்சிருச்சி ன்னு sms வந்தது , என் அப்பாவ கூட்டிட்டு நான் முதல் முதலா விளக்கு போட்ட பைரவர் முன்னாடி சூடம் பொறுத்த சொல்லி எனக்கு பேங்க் வேலை கிடைச்சிருச்சு , என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ன்னு சொல்லி கால்ல விழுந்தேன்


குருநாதர் கிட்டயும் போன் பண்ணி விசயத்தை சொல்லி ஆசிர்வாதம் வாங்கினேன் , பாபா , பைரவர் , சிவன் , ஆஞ்சநேயர் , நாமகிரி தாயார் , நரசிம்மர் ன்னு எல்லா கடவுளுக்கும் மாலை வாங்கி போட்டுட்டு நன்றி சொன்னேன் ,


எனக்கு வேலை கிடைச்சது சாதரணமான விஷயம் இல்லை , 5 வருசத்துக்கு முன்னால ஒரு நண்பரோட மாமனார் கேரளாவில ஒரு central government பேங்க் ல regional manager ஆ இருந்தார் நண்பர் எனக்காக அவர் கிட்ட பேசி பணம் கொடுத்து வேலை வாங்க முடியுமா ன்னு கேட்டார் 4 லட்சம் வரைக்கும் செலவாகும் நான் வங்கி தரேன் ன்னு சொன்னார் , நான் என் அண்ணன் கிட்ட விசயத்தை சொன்ன போது , எந்த சூழ்நிலையிலும் குறுக்கு வழியில போகாதே , அது ஒரு நாளும் கவுரமான வெற்றியை தராது வேண்டாம் ன்னு சொல்லிட்டார் , சரி ன்னு விட்டுட்டேன் , இருந்தாலும் மனசு அறைகுறைய இருந்தது , என் அண்ணன் நீ சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை இந்த வழியில வேண்டவே வேண்டாம் சொல்லிட்டார் , அப்போ என் கிட்ட பணம் இருந்தது , 10 நாள் கழிச்சு தற்செயலா அந்த நண்பனை சந்திச்சப்போ அவங்க மாமனார் தவறிட்டதாக சொன்னார் , ஒரு வேளை பணம் கொடுத்து இருந்தால் அவ்வளோதான்,

ரெண்டாவதா நண்பன் அவனோட நண்பர் ஒருத்தர் கிட்ட நான் பேங்க் exam க்கு தயார் ஆகிகிட்டு இருக்கேன் என்னை பத்தி அறிமுகம் செய்து வைத்தான் , அவர் தன் தங்கைக்கு எதாவது செய்யணும் , என் தங்கச்சிக்கு சொல்லி கொடுத்து பாஸ் பண்ண வைக்க முடியுமா ன்னு கேட்டார் , நண்பனும் உன்னால பாஸ் பண்ண வைக்க முடிந்தால் ,அதையே காரணமா வச்சு நாம இங்கேயே COACHING CLASS ஆரம்பிக்கலாம் ன்னு சொன்னான் , நானும் 9 வருஷமா சுயமா கத்துகிட்ட அனுபவம் இருக்கரதால சரின்னு சொல்லி அந்த பொண்ணுக்கு exam க்கு apply பண்ணிட்டு சொல்லி கொடுக்க தயார் ஆனேன் , ஒரு மாசம் கழிச்சு நண்பனுக்கு வேற ஒரு விஷயமா பேசிட்டு , அப்படியே சொல்லிகொடுக்கரத பத்தி பேசறதுக்காக அவனுக்கு போன் பண்ணேன் , நான் இங்கே ஊருலதான் இருக்கேன்ன்னு சொன்னான் , என்ன விஷயம் ன்னு கேட்டேன் , அந்த நண்பர் ஒரு விபத்துல தவறிட்டார் ன்னு அதுக்க்காகதான் ஊருக்கே வந்தேன் ன்னு சொன்னான்

இப்படி ஒரு வேலைக்காவும் , வருமானத்துக்காகவும் மிக பெரிய போராட்டத்தை சந்திச்சிட்டு வந்த சூழ்நிலையில தான் எனக்கு இப்படி ஒரு வேலை கிடைச்சது

சென்னை ல ஒரு ஞாயிற்று கிழமை நாள்ல certificate verification அடுத்த நாள்ல இருந்து ஒரு வாரம் training , training date ல இருந்து duty joining ன்னு சொல்லி 3 appointment order copy வந்தது , அப்படி ஒரு letter வீட்டுக்கு வந்ததாக என் போன் பண்ணி சொன்னார் ,

APPOINTMENT ORDER வீட்டுக்கு வந்த அந்த நாள் சரியா 365 நாளுக்கு முன்னாடி குருநாதர் கிட்ட போன் பண்ணி கேட்டப்போ தினமும் பைரவருக்கு விளக்கு போட்டு கிட்டு வாங்க , நன்மை நடக்கும் ன்னு சொன்னாரே அந்த நாள் தான் , நேரமும் கூட அரை மணி நேரம் தான் வித்தியாசம் , யோசித்து பார்த்தப்போ இந்த விஷயம் தூக்கிவாரி போட்ட மாதிரி இருந்தது ,

பைரவருக்கு நான் விளக்கு போட ஆரம்பிச்ச 365 வது நாள் சரியா ஒரு வருஷம் கழிச்சு எனக்கு APPOINTMENT ORDER வீட்டுக்கு வருது

certificate verification க்காக நான் அலைஞ்சது medical டெஸ்ட் க்காக தான் , மெடிக்கல் டெஸ்ட் க்காக அலைஞ்ச போதுதான் 7 மாசத்துக்கு முன்னாடியே
இனமேஅடுத்து மெடிக்கல் டெஸ்ட் அப்புறம் வேலைதான் ன்னு குருநாதர் சொன்னது நினைவுக்கு வந்தது

பைரவர் கோவில் பூசாரிகிட்ட 9 நாளுக்கும் தேவையான விளக்கும் எண்ணையும் வாங்கி கொடுத்திட்டு, என் நண்பன் ஒருத்தன் கிட்ட 9 நாளுக்கு ஆஞ்சநேயருக்கு விளக்கு போட சொல்லி பணம் கொடுத்துட்டு , ஒரு வாரம் சென்னை ல trainning , certificate verification க்கு முதல் நாள் சனிக்கிழமையே சென்னை ல திருவான்மியூர் ல இருக்கற நண்பன் ரூமுக்கு போயிட்டேன் , அன்னைக்கே ஈஞ்சம்பாக்கத்துல இருக்கற பாபா கோவிலுக்கு போய்ட்டு வந்தேன் , (நான் போன பாபா கோவில் அது ஒண்ணுதான் )

(3 வருசத்துக்கு முன்னாடி நான் குருநாதரை சந்தித்தப்போ அவர் நீங்க இங்க இருக்காதிங்க வெளியூர் எங்காவது போங்க ன்னு சொன்னார் , எனக்கு 21 சனி கிழமை வரைக்கும் எங்க போறதுன்னு தெரியாம , சென்னை ல திருவான்மியூர் ல இருக்கற நண்பன் ரூமுக்கு போய் பேங்க் exam க்கு தயார் ஆகலாம் ன்னு தங்கியிருந்தேன் , அப்போ 21 சனிக்கிழமையும் திருவான்மியூர் ல இருக்கற அருள் மிகு மருந்தீஸ்வரர் கோவில்ல இருக்கற காலபைரவருக்கு விளக்கு போட்டுட்டு வந்தேன் )

மறுபடியும் அருள் மிகு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு போவேன்னு கற்பனை கூட பண்ணலை
training க்காக காலை ல கிளம்பி போனபோது turning ல கோவிலை பார்த்தபோது ஆட்டோவை நிறுத்தி இறங்கிட்டேன் , வாழ்க்கைல முதல் முறைய வேலைக்கு போறோம் , 3 வருசத்துக்கு முன்னாடி இந்த கோவில்ல தான் விளக்கு போட்டுட்டு 4 மாசம் bank exam ல கேக்கற 200 கேள்விக்கும் எனக்கு தெரியாதது ன்னு எதுவுமே இருக்க கூடாது ன்னு வெறிபுடிச்ச மாதிரி பேங்க் exam க்கு தயார் ஆனேன் , இப்போ பாஸ் ஆனா பரிட்சைக்கும் கூட அப்போ படிச்ச படிப்பு தான் காரணம் , அப்படி பட்ட கடவுளை வணங்காம போறது சரியில்லை ன்னு , அந்த கோவிலுக்கு போய் பைரவருக்கு விளக்கு போட்டு போலாம் ன்னு உள்ளே போனேன் , சிவ பெருமானுக்கு அப்போதான் அபிஷேகம் ஆரம்பம் செய்திருப்பாங்க போல , சிவபெருமானுக்கு பாலபிசேகம் நடைபெற்று கொண்டிருந்தது , அப்போ ஒரு 6, 7 பேரு ரொம்ப ராகமா ஒரு சிவன் பாடலை பாடிகிட்டு இருந்தாங்க , கேட்டு சொக்கி போயிட்டேன் , என் போன் record பண்ற வசதி இல்லாததல கேக்கற பாக்கியம் மட்டும்தான் கிடைச்சது அந்த கோவில் ரொம்ப பழமை வாய்ந்தது , அகத்தியருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்து , அனைத்து வியாதிகளுக்கு உண்டான மருந்து , மூலிகை ரகசியங்களை அகத்தியருக்கு சிவபெருமான் போதித்த தலம் இது , இங்க பாலபிசேகம் முடிஞ்ச உடனே கிழே விழும் பாலை ஏந்தி குடிக்க கூட்டம் கூடும் , இங்க கொடுக்கும் விபூதியும் , சிவனுக்கு அபிசேகம் செய்த எல்லாமே மருந்துதான்

எப்பவும் காலைல 7 to 8 குள்ள சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் ,

ஒரு வாரமும் இந்த அபிசேகத்தை பார்த்திட்டு, பைரவரை வணங்கிட்டு தான் training க்கு போனேன் கடைசியா 6 வது நாள் சனிகிழமை training , அன்னைக்குதான் training முடிஞ்சு எந்த ஊர்ல posting தகவல் சொல்லுவாங்க , ரொம்ப ஆர்வமா கோவிலுக்கு போனேன் ,கோவிலுக்கு போனா , சிவனுக்கு அபிசேகத்தை முன்னாடியே முடிசிட்டாங்க , வழக்கமா வர்ற எல்லாருமே புலம்பிகிட்டு இருந்தாங்க

கொஞ்ச நேரத்துல கோவில் அர்ச்சகர் , அங்க பைரவருக்கு அபிஷேகம் ஆரம்பிக்க போகுது , எல்லாரும் அங்க போங்க ன்னு சொன்னார் ,இப்படி நடக்கும் ன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலை ,

பைரவருக்கு அபிஷேகம் நடந்து முடிந்தது , எல்லாரும் போய்ட்டாங்க , பைரவர் முன்னாடி மண்டியிட்டு தலைவணங்கி , தலை தூக்கி பார்த்தப்போ பைரவர் தலையில இருந்து ஒரே ஒரு வில்வ இலை இறங்கி அவர் பாதத்துல விழுந்தது , அவர் தலைல வேற எந்த பூவோ இலையோ இல்லை ,
எனக்கு சந்தோசத்துல அழுகைதான் வந்தது , பக்கத்துக்கு ஊர் லயே posting போட்டாங்க
அடுத்தநாள் சிவனுக்கு அபிசேகத்தை பார்த்திட்டு , பாபா வையும் வணங்கிட்டு
ஊருக்கு வந்துட்டேன் ,

ஊருக்கு வந்து நான் தினமும் காலைலயும் , இரவுலயும் சாப்பாடு வாங்கி கொடுத்துகிட்டு இருந்த அந்த மன நிலை சரியில்லாதவரை காணோம் , என்ன விசாரிச்சப்போ அவரை மன நல காப்பகத்துக்கு கூட்டிட்டு போயட்டன்கலம் ,

எனக்கு அன்னதானம் ன்னா என்ன , அதோட வலிமையை என்னன்னு புரிஞ்சது . இதுவும் பைரவர் உத்தரவு ன்னும் புரிஞ்சது
அபிசேகத்துல கலந்துகிறது எல்லாமே பைரவர் உத்தரவு தான் ன்னு புரிஞ்சது

அடுத்தநாள் duty ல join பண்ணேன் , 15 நாள் கழிச்சு ஒரு நாள் சாப்பிட்ட உணவு ஏதோ ஒதுக்கலை , நைட்டு வாந்தி எடுத்து உடம்பை என்னமோ பண்ணிடுச்சி , சிவனை நினைச்சு வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் வேலை முடிச்சிட்டு கிளம்பும்பொது , பக்கத்துல இருக்கற ரொம்ப பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு போய் சிவனை வணங்கினேன் , அன்னைக்கு வியாழன் கிழமை ஒவ்வொரு வியாழக் கிழமையும் அங்க இருக்கற குருபகவானுக்கு ஹோமம் செய்து அபிஷேகம் செய்வார்களாம் , நான் உள்ள போன 10 நிமிஷம் கழிச்சு ஹோமம் ஆரம்பம் ஆனது . எனக்கு ஏன் அந்த ஊருக்கு posting கிடைச்சதுக்கான காரணமும் தெரிஞ்சது


அடுத்த 2 நாள் கழிச்சி ஒரு சனி கிழமை அன்னைக்கு எனக்கு முதல் மாசம் சம்பளம் வந்தது , அன்னைக்கி தேய்பிறை அஷ்டமி , நான் கலந்துக்கற 13 வது தேய்பிறை அஷ்டமி. மொத்த சம்பளத்தையும் வாங்கிட்டு நேர ஊருக்கு வந்து பரீட்சைக்கு முதல் நாள் உக்கார்ந்திருந்த பாபா வழிபாட்டு மன்றத்துக்கு போய் மொத்த பணத்தையும் பாபா பாதத்துல அரை மணி நேரம் வச்சிட்டு அப்படியே பாபா பாததில் விழுந்து வணங்கினேன் , வீட்டுக்கு போயிட்டு அப்பா அம்மா கிட்ட கொடுத்துட்டு அவங்க காலில் விழுந்து வணங்கினேன்,

5 மணிக்கு பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைக்கு கலந்துக்க போனப்போ அவர் கிட்ட முதல் மாச சம்பளம் ன்னு அந்த பணத்தை பைரவர் பாதத்துல வச்சி கொடுக்க சொன்னேன் ,அன்னைக்கு பைரவருக்கான பூஜை செலவு 500 ரூபாயை எடுத்து அவர் கிட்ட கொடுத்தேன் , நான் சம்பாரிச்சு செய்த முதல் செலவு அது , ஆஞ்சநேயர் , நாமகிரி தாயார் , நரசிம்மர் ன்னு எல்லாரையும் வணங்கிட்டு , முதல் மாச சம்பளத்தோட அடையாளமா பாபா வோட சிலையை வாங்கினேன் , குருநாதருக்கு போன் பண்ணி சொன்னேன் வாழ்த்தினார் .

நன்றி ! http://copiedpost.blogspot.co.uk/

Wednesday, August 6, 2014

சொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்


சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும்;மகாலட்சுமி அல்லது குபேரன் அல்லது பெருமாளை வழிபட்டால் செல்வம் பெருகும்.ஆனால்,இந்த இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமெனில்,நாம் பைரவர்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வேண்டும்.



ஒரே நேரத்தில் நமது பாவங்கள் எனப்படும் கர்மங்கள் நீங்கும்;அதே சமயம் நமது வேலை அல்லது தொழில் மூலமாக வருமானம் பெருகிக் கொண்டே செல்லும்.நேற்று தேய்பிறை அஷ்டமிநாள்.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டர் தூரத்தில் தாடிக்கொம்புகிராமம் அமைந்திருக்கிறது.இங்கே அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்த கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.காலை 9.30,11.30 மாலை 3.30,5.30 மற்றும் இரவு 7.30க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் சொர்ண ஆகர்ஷணபைரவருக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொண்டாலே நமது வருமானம் பெருகும்;பாவங்கள் குறைந்து கொண்டே வரும்.



கொடுத்த கடன் திரும்பிவராமல் தவிப்போர்கள்,தொழிலில் கொடிகட்டிப் பறந்துதிடீரென வீழ்ச்சியை நோக்கிப் பயணிப்போர்கள்,வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாமல் தவிப்பவர்கள்,அரசியலில் மாபெரும் சாதனை செய்ய விரும்புவோர்,முன் ஜன்ம வினைகளால் உயிரைத் தவிர அனைத்தையும் இழந்துவிட்டவர்கள் சொர்ண ஆகர்ஷணபைரவரை தொடர்ந்து எட்டுதேய்பிறை அஷ்டமிகளுக்கு இங்கு வந்து வழிபட வேண்டும்.ஒருமுறை வந்ததுமே மாபெரும் முன்னேற்றம் அடைவதை உணரலாம்.



இதைச் செய்ய முடியாதவர்கள் ஆன்மீகக்கடல் முகவரிக்கு  மணி ஆர்டர் அனுப்பி சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஒரிஜினல் போட்டோவையும் வீட்டிலேயே வழிபடும் முறையையும் பெற்று தினமு 20 நிமிடம் வழிபாடு செய்யலாம்.

ஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

நன்றி ! http://ashtabairava.blogspot.in

Tuesday, July 15, 2014


பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும் சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்தோடு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும்.

நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட: புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்;
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்
இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில் பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது (படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.

வழக்குகளில் வெற்றி பெற: சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள் தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும் காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும்;பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு அவருடைய சன்னதியில் பைரவர் 108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.

கணவன் மனைவி பிரச்னைகள் தீர: புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது)

ஸர்ப்ப தோஷம் விலக: ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்; திருமணத்தடை அகலவும்: வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

நன்றி ! படுகை. காம்

Tuesday, June 24, 2014

காசிக்கு நிகரான திருச்சி பைரவர் கோவில்


திருச்சி நகரில் சாதாரண பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து பொருட்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தங்க வைர நகைகள் வரை அனைத்தையும் விற்பனை செய்யும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்து இருப்பதால் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படுவது திருச்சி பெரிய கடைவீதியாகும். இந்த பெரிய கடைவீதியில் நூறாண்டு பெருமைமிக்க ஸ்ரீ பைரவநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பைரவர் வீற்றிருப்பதால் இது பைரவருக்கான தனி ஸ்தலமாக விளங்கி வருகிறது. வடக்கே புனித ஸ்தலமான காசியில் கங்கையை பார்த்தபடி வீற்றிருக்கும் பைரவருக்கு நிகரான சக்தி வாய்ந்தவராக நம்பப்படுவதால் இந்த கோவிலை திருச்சியின் காசியாகவே கருதி வழிபட்டு வருகிறார்கள் ஆன்மிக வாதிகள். முன்பெல்லாம் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மற்றும் திருச்சியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வந்த இந்த கோவில் தற்போது பிரபலங்களின் வருகையால் திக்குமுக்காடி வருகிறது. தேய்பிறை அஷ்டமி தினங்களில் இந்த ஆலயத்திற்கு வந்து பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டாலும், சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தி வழிபட்டாலும் எம பயம் நீங்கும், ஆயுள் நீடிக்கும், எதிரிகள் துவம்சம் ஆகி விடுவார்கள், ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இருக்கும் பதவியை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளலாம் என நம்பப்படுவதால் சமீபத்தில் இந்த கோவிலுக்கு அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ள பிரபலங்களின் பார்வை இந்த கோவிலின் பக்கம் திரும்பி உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த கோவிலுக்கு வந்து பூஜை நடத்தியதால் பதவியை இழந்த அரசியல் பிரபலங்கள் மீண்டும் பதவி பெற்றிருப்பதே இந்த கோவிலின் சிறப்புக்கு காரணம் என்கிறார்கள் பைரவரின் பக்தர்கள்.

நன்றி !தின தந்தி

Saturday, June 7, 2014

சனிதோஷம் போக்கும் பைரவர் வழிபாடு

இலந்தையடிவிளை முத்தாரம்மன் தலத்தில் பைரவர் நாய் வாகனத்துடன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். சுதை வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகம் இல்லை. தொடர்ந்து 8 வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் இரவு வேளையில் பைரவருக்கு புனுகு சாத்தி, மரிக்கொழுந்து மாலை அணிவித்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், நாம் நினைத்த நற்காரியங்கள் யாவும் ஈடேறும். இந்நாட்களில் அசைவத்தை தவிர்ப்பது நலம் பயக்கும். 

பைரவர், சனீஸ்வரரின் குரு. ஆதலால் இத்தல பைரவரை சனிக்கிழமை மாலை வேளையில், எள் எண்ணெய் எனும் நல்லெண்ணெய் தீபமேற்றி, 8 சனிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால், சகலவிதமான சனி தோஷங்களும் அடியோடு அகன்று விடும்.

வெள்ளிக் கிழமைகளில் இத்தல பைரவருக்கு வில்வ மாலை அணிவித்து, நெய்யில் சுட்ட உளுந்து வடை நிவேத னம் செய்து வழிபட்டால் செல்வமும், சகல ஐஸ்வரி யங்களும் கிடைக்கப்பெறும்.

அமாவாசை அல்லது ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவருக்கு எலுமிச்சை மாலை, நாகலிங்கப்பூ மாலை சூட்டி, எள் அன்னம் படைத்து முன்னோர்களை நினைத்துப் பிதுர் பூஜை மந்திரம் கூறி அர்ச்சித்து, 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையான பித்ரு தோஷத்தை பைரவர் நீங்கி அருள்வார்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, தாமரை பூ சூட்டி, அவல் கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து 8 வாரங்கள் செய்து வர, திருமணத் தடைகள் அகன்று, மனதுக்குப் பிடித்த துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி,

பால் பாயசம் நிவேதனம் செய்தால் நாக தோஷமும், சனிக்கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, நாகலிங்கப் பூ சூட்டி, பால்பாயசம், கருந்திராட்சை நைவேத்தியம் படைத்து வழிபட்டால் விஷய பயமும் அடியோடு அகலும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு, தங்கள் தனத்தை பெருக்கிக் கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  

 நன்றி ! மாலை மலர்

Thursday, May 8, 2014

வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்


வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:-

1. செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டும் அருந்தி கொள்ளலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

2. சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.

3. ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று இரவில் மட்டும் உண்ணலாம். இல்லையென்றால் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இந்த விரதங்களை முறைப்படி கடைப்பிடித்து வந்தால் நல் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி அனைத்து விதமாக சந்தோஷங்களும் கிடைக்கும்.

நன்றி ! மாலை மலர்

Tuesday, April 22, 2014


  • திருப்போரூர் அடுத்துள்ளது வெண்பேடு ஊராட்சி. இங்குள்ள காட்டூரில், பழமையான கால பைரவர் கோவில், 300 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்து உள்ளது. குடிநீர் வசதி இல்லை, பொதுவாக சிவன் -முருகன் கோவில்களில் வெளிபிரகாரத்தில் பைரவர் கோவில்கள் இருக்கும். மாறாக இங்கு தனிகோவிலாக, கால பைரவர் கோவில் உள்ளது. கிராமத்தினர் தீவிர முயற்சியில், 10 அடி இடைவெளியோடு படிக்கட்டுகளும், அதை கடக்க சாய்தள பாதையும் அமைத்துள்ளனர். ஆனால், பைரவர் கோவில் மீது முட்செடிகள் வளர்ந்துள்ளன. அருகில் உள்ள விநாயகர் கோவில் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.கோவிலின் எதிரில் ஏராளமான கருங்கற்களால் ஆன, யானைகள் திறந்த வெளியில் கிடக்கின்றன. கோவில் நித்ய பூஜையினை கங்காதரன், 70. என்பவர் மேற்கொண்டு வருகிறார். கோவில் சிறப்பு குறித்து கங்காதரன் கூறியதாவது, "சுற்று வட்டாரத்தில் தனித்தன்மையுடன், பைரவர் கோவில் உள்ளது. அஷ்டமி நாளில் பைரவரை வழிபட்டால், தீராத கவலை நீங்கும். தினசரி மாலை 3:00 மணி முதல், 5:00 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். விசேஷ நாளில் சுவாமிக்கு வடைமாலை சாத்துகிறோம். மலை மீது குடிநீர் வசதி இல்லை. வரலாற்று சிறப்புமிக்க கோவிலை சீரமைக்கவும், எளிதில் பக்தர்கள் மலையோர வசதியாக படிக்கட்டுகள் அமைக்கவும், ஆன்மிக அன்பர்களும், அறநிலை துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.
  • நன்றி ! தினகரன் 
  • பைரவர் அருள் ! இதனைப்படிக்கும் வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ............ உங்களால் இந்த கோவிலுக்கு செல்ல முடிந்தால் சென்றுவிட்டு , உங்களால் முடிந்த சில திருப்பணிகளை செய்து பைரவர் அருளைப் பெற்றிடுங்கள்.  சென்னைக்கு அருகில் பைரவருக்கென்று ஒரு தனி ஸ்தலம் இருப்பது ஒரு பெரிய வரப்பிரசாதமே !
  • நன்றி !

Saturday, April 5, 2014

7 நாட்களும் ராகுகால  
பைரவர் வழிபாடு பலன்கள்





காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.

*
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.

*
திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.

*
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

*
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.

*
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

*
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

*
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நன்றி ! மாலை மலர்