Monday, February 17, 2014

பைரவர் விரத வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் சிம்ம ராசிக்காரர்கள் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பு. தள்ளிப்போகும் திருமணங்களுக்கு பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு காலத்தில் விரதமிருந்து (மாலை 4.30 மணி முதல்-6.00 மணி வரை) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும்.

இந்த விரதத்தை தொடர்ந்து  9 வாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் விரதமிருந்து ராகு காலத்தில் கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

நன்றி !  மாலைமலர் 

No comments: