Sunday, June 26, 2011

காலாஷ்டமி!


              

இந்த விரதத்திற்கு வைக்கம் அஷ்டமி என்றும், மகாதேவ அஷ்டமி என்றும் பெயர் உண்டு. கார்த்திகை மாதம் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியே காலாஷ்டமி எனப்படும். இது காலபைரவரின் அவதார தினமாகும். பிரம்மாவுக்கும் முதலில் 5 தலைகளே இருந்தன. சிவனது முடியைக் காணா விட்டாலும், கண்டேன் என்று தவறாக கூறியதால் அவரது ஐந்து முகத்தில் ஒன்றை எடுப்பதற்காக தோன்றியவரே கால பைரவர். அவரே காசிக்கு வருவோரின் பாவத்தை கண்டிக்கும் பொறுப்பை உடையவர். அவர் கொடுக்கும் தண்டனையின் அடையாளமே நாம் கட்டிக்கொள்ளும் காசிக் கயிறு. அதைக் கட்டிக் கொண்டால் நாம் செய்த பாவம் விலகும் என்பது ஐதீகம். பிரம்மனின் தலையை எடுத்த தோஷம் நீங்க பைரவர் தீர்த்தயாத்திரை மேற்கொண்டபோது காசிக்கு வந்ததும் அவரது பாவம் நீங்கிற்று. உண்மையை மறைத்த பிரம்மாவை தண்டித்தது போல எல்லா மனிதரின் பாவங்களையும் நீக்குவதற்காக பைரவர் காசியிலேயே தங்கிவிடுகிறார். நமது பாவங்கள் போய்விடுவதால் மீண்டும் எமன் நம்மை அண்டாமல் சிவனடியில் நம்மை பைரவர் சேர்த்து விடுகிறார். சிவபெருமானுடைய 5 முகங்களில் இருந்து தோன்றிய 25 மூர்த்திகளில் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் பைரவர். பேராபத்தையும் சிறுநொடியில் அகற்றிடும் பைரவரை நமக்கு ஏற்படும் அபாயங்களை போக்கிடுமாறு
பரமனை மதித்திடா பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி தெய்வமாகும்.
என்று கூறி வணங்கிடுவோம்.

நன்றி !!!

No comments: