Tuesday, July 12, 2011

Bairavar Thuthi ! - பைரவர் துதி !

பைரவர் துதி 

ரக்த ஜ்வால ஜடாதரம்  ஸுவிமலம்  ரக்தாங்க தேஜோமயம்
திருத்வா சூல கபால் பபச டமருந் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம்  ஸூனவாஹனம்  த்ரிந்யனம்  ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பூத பிசாச நாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம் 


காலச்சக்கரம் சுழல்கிறது அதில் நவகிரஹங்களும்  காலச்சக்கிரத்தின் பிடியில்
உட்பட்டு   செயல்படுகின்றன இந்தக் கால்ச்சக்கிரத்தை  இயக்குபவரே
இந்தக் காலபைரவர்
ஒவ்வொரு நொடியும் இவரது ஆணைக்கு உட்பட்டு  தோன்றி  மறைகிறது சிவபெருமானின்
ஓர் அம்சம்தான் இவர்  இவருக்கு  64   திருமேனிகள் உண்டு  ஆனால் முக்கியமாகக்
கருதுபவர்கள் எட்டு  பைரவர்கள் இதனால்  இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பார்கள் 

சம்ஹாரபைரவர்   ,, அசிதாங்க பைரவர் ,  சண்ட பைரவர்   உன்மத்தபைரவர்
கபால பைரவர்   பீஷ்ண பைரவர்   உரு பைரவர்     குரோத பைரவர்
ச்ம்ஹார பைரவருக்கு வாஹனம்   நாய்
அசிதாங்க பைரவருக்கு  வாஹனம்  அன்னம்
சண்ட பைரவருக்கு வாஹனம்   மயில்
உன்மத்த பைரவருக்கு வாஹனம்  குதிரை
கபால பைரவருகு  வாஹனம்   யானை
பீஷ்ண பைரவருக்கு வாஹனம்  சிம்மம்
உரு பைரவருக்கு வாஹனம்  ரிஷபம்
குரோதபைரவருக்கு   வாஹனம்   கருடன் 
சுவானம் என்று நாய்க்கு சம்ஸ்கிருதத்தில் பெயர்     பைரவர்
ஒரு காவல் தெய்வம்  அதே போல் நாயும் காவல் காக்கும்   நன்றியுள்ள மிருகம் அது
ஒன்றுக்குத்தான்  எமதூதர்களைப் பார்க்கும் சக்தி  உண்டு
சிவன் கோயிலில் கண்டிப்பாக பைரவருக்கு இடம் உண்டு இரவில் அவரிடமே
நடைச்சாத்தியப்பிறகு    கோயில் சாவியை ஒப்படைப்பார்கள்
அனாயாச மரணம் வேண்டும் மரணபயம் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்கள்
எந்தக்   காலத்திலும் யாரும் ஆஸ்பத்திரிக்குப்  போய் பல  மாதங்கள் படுக்க ஆசைப்
பட மாட்டார்கள்  எல்லோருமே பேசிக்கொண்டே இருக்கும் போது மரணம்  அடைய
விரும்புவார்கள்   தவிர
அகால மரணம் துர் மரணம்   மற்றும் பெரும் துன்பத்திலிருந்து
காத்துக் கொள்ள இவரை வணங்க வேண்டும்  அஷ்டமி அன்று இவரை வணங்க
வேண்டும் அதுவும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி இவருக்கு உகந்த நாள்  ஜாதகத்திலும்
ஆயுள் ஸ்தானம் எட்டாவது இடத்தில்
இருக்கும்   சிகப்பு நிற வஸ்திரம்   சிவப்பு மலர்கள்
சிவப்பு பழங்கள் இருப்பது மிகச்சிறப்பு
இவருக்கு நெய் விளக்கு ஏற்றி பிரார்த்தனைச்
செய்வது வழக்கம்  .  சில பரிஹாரங்களுக்கும்  பைரவர்  பூஜை செய்யப்படுகிறது.

No comments: