Friday, July 15, 2011

செல்வ வளம் அருளும் செங்காநத்தம் வைரவர்

வேலூர் நகருக்கு அருகில் நான்கு வழிச்சாலைக்கு அருகில் செங்காநத்தம் கிராமம் உள்ளது .  இயற்க்கை எழில் கொஞ்சும் இங்கே தான் வயல் வெளியில் குடியிருந்து அருள் பாலிக்கிறார்  வைரவர் .

விஷ்ணுவின் அம்சம் 

சிவனின் அம்சமான வைரவர் வழிபாடு தமிழகத்தின் தொன்மையான ஒன்று .  காவல் தெய்வமாக போற்றப்படும் வைரவர் சிவனின் அம்சமாக 2,  விஷ்ணுவின் அம்சமாக 3, பிரம்மாவின் அம்சமாக 1,  இந்திரனின் அம்சமாக 1  என கூறப்படுகிறது .  செங்காநத்தம் கிராமத்தில் அருள் பாலிப்பவர் வைரவர் விஷ்ணுவின் அம்சமாக உள்ளார் .

வைரவருக்கென தனிக்கோவில்கள்

தமிழகத்தில் பிள்ளையார் பட்டி அருகே வைரவன்பட்டியிலும் , புதுக்கோட்டை லிங்கேஸ்வரர் கோவிலிலும் , சுசீந்திரம் அருகே ஒரு குக்கிராமத்திலும் வைரவருக்கு தனி சந்நிதிகள் உள்ளன .   அதே போல் செங்காநத்தம் கிராமத்திலும் வைரவர் தனியே கோவில் கொண்டுள்ளார் .   

பத்து கைகளுடன் வைரவர்


வயல்கள் நடுவே மேற்கூரைல்லாத சிறிய கோவிலில் வைரவர் வீற்றிக்கிறார் .  இங்குள்ள வைரவர் பத்து கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் .  மேலும் வைரவரின் வாகனமாக பைரவர் சிலைகள் எழும் உள்ளன .  தேய்பிறை அஷ்டமி தோறும் வைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது .  மேலும் சித்திரை பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர் .

இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கொடிபோன்று தொங்கும் இலைகளுடன் வில்வ மரம் போல் காட்சியளிக்கும் மரம் .  வைரவர் சந்நிதியின் பின்னே உள்ள அந்த மரத்தைப் பார்த்தாலே அதன் பழமை நமக்கும் புரியும் .  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படும் அந்த மரம் அபூர்வ ரகங்களில் ஒன்று .  இந்த மரத்தின் பெயர் " களர் உகா " என சொல்லப்படுகிறது .  

இங்கே வீற்றிருக்கும் வைரவரை நாம் மனமுருகி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் .  செல்வ வளம் சேரும் ,  குறைகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை .

(பி. கு. - இந்த பதிப்பில் உள்ள படம் தேவதானப்பட்டி பைரவர் .  செங்காநத்தம் வைரவர் படம் இருந்தால் அன்பர்கள் அனுப்பிவைக்கவும் email id gsethuanandh@gmail.com)

நன்றி !!! தினமலர் திருச்சி  (14/07/2011)



No comments: