Monday, November 28, 2011

பொன்னும் பொருளும் அள்ளித்தரும்
ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்


ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைர வரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும்; ஐஸ்வரியம் பெருகும் என்பர்.

சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக, டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது.

முற்காலத்தில், தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், ஸ்வாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு (செவிவழி) தகவல் உண்டு! இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீபைரவமூர்த்தி!

நன்றி ! சக்தி விகடன் 

No comments: