Friday, May 6, 2011


Bairavar saves our health and wealth

நம் நலம், வளம் காக்கும் பைரவ வழிபாடு

bairavar2.jpg

லிகாலத்தில் நம்மைக் காப்பதற்காகட்டும், செல்வ வளங்களை வழங்குவதற்காகட்டும், இரண்டுக்கும் பைரவ வழிபாடு மிகச் சிறந்தது. பொதுவாக எல்லாச் சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்குப் பகுதியிலே நிர்வாணமாய், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் மேல்நோக்கிய அக்னி ஜுவாலை கொண்ட கேசத்தினராய், பிறைச்சந்திரன் அலங்கரிக்க, இருகோரைப்பற்கள் வெளியே தெரிய, இடுப்பில் நாகங்களை அணிந்து, கரங்களில் சூலம், பாகம், டமருகம் தாங்கி, பாதங்களில் தண்டை அணிந்து உக்ர ரூபத்துடன் காவல் தெய்வமாய் நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிப்பவர் காலபைரவர், காலச் சக்கரத்தின் அதிபதியும் இவரே.
ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இவர் காக்கும் தெய்வம் காலபைரவர்.
செல்வம் தரும் சொர்ண பைரவர் :




சுவர்ணம் என்றால் தங்கம் என்று பொருள். தன்னுடைய பெயரிலேயே சுவர்ணத்தைக் கொண்ட இவர் அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் அள்ளி அள்ளி தருபவர். நினைத்ததையெல்லாம் தரும் கற்பக மரத்தடியில் அழகிய சிம்மாசனத்தில் சிவசக்தி வடிவில் சுந்தரரூபனாக மடியில் சுவர்ணாதேவி அமர்ந்த நிலையில் காட்சித் தருபவர் சுவர்ணாகர்சன பைரவர் ஆவார்.
“சுவர்ணாகர்சன” என்றால் “எளிதில் கவரக்கூடிய” என்று அர்த்தம். சுவர்ணாகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தருபவர், அதாவது தன்னை பயபக்தியுடன் உண்மை அன்பு கொண்டு வேண்டுபவர்களிடம் பொற்குவியலை கவர்ந்து இழுத்து தானாக சேரும்படி செய்பவர் என்று பொருளாகும்.
பண்டைக் காலங்களில் அரசர்கள் தங்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவப் பெருமானை நிறுவி அவருக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டு வ்நதமையினால் அவர்களது நிதிச் சாலைகளில் பொன் குவிந்து கொண்டே இருந்ததுடன் அவர்களை எவராலும் எளிதில் வெல்ல இயலாத அளவு சக்தியைப் பெற்றிருந்தனர். இதுதான் உண்மை. பைரவர் திகம்பரராய்த் திகழ்ந்த போதிலும் உண்மையான அன்பர்களுக்கு பொன்னையும் பொருளையும் வாரி வாரி வழங்குபவர்.
“ஸ்ரீதத்துவநிதி” என்னும் நூலில் சொர்ணாகர்சன பைரவர் பொன்னிறம் கொண்டவர். மஞ்சள் நிறப் பட்டாடைகளை அணிந்தவர். மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவர். நவரத்தின மணிகள் இழைத்த பொன்னாலான அட்சயப் பாத்திரம் ஏந்தியவர். சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றைத் தரித்தவர். அனைத்து தேவாதி தேவர்களாலும் போற்றப்படக்கூடியவர். எல்லையில்லா ஆனந்தத்திலிருப்பவர். சகல சித்திகளையும் அருள்பவர் என்றும்,
“ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரகோசம்” என்ற நூலில் சுவர்ணாகர்சன பைரவமூர்த்திக்கான மந்திரம், யந்திரம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுவர்ணாகர்சன பைரவர் மடியில் அமர்ந்திருக்கும் பொன் நிறமாகப் பிரகாசிக்கும் தேவியை ஸ்வர்ணா என்றும சுவர்ணபைரவி என்று அழைத்தும் சகல அணிமணிகள் பூண்ட இவள் பொன் கொட்டும் சூடம், தாமரை, அபய முத்திரை தரித்தவளாகவும் பைரவரைத் தழுவிக் கொண்டு இடது பாகத்தில் வீற்றிருப்பவளாகவும் அடியார்களுக்கு செல்வம் அனைத்தும் தருபவளாகவும் விளக்கப்பட்டுள்ளது.
ஆகம சாஸ்திர நூல்களில் சுவர்ணாகர்சன பைரவர் பற்றிக் குறிப்பிடும் போது மஞ்சள் பட்டு உடுத்தி, விலையுயர்ந்த அணிமணிகளை அணிந்து, நவரத்ன கிரீடம் சூடி, செந்நிற மேனியராய், அன்றலர்ந்த தாமரை போல் புன்னகை பூக்கும் திருமுகத்துடன், பொன்னிற முடியில் சந்திரனைச் சூடி, சுந்தரரூபனாக கரங்களில் தாமரை, பொன்மணிகள் பதித்த கங்கம், அமுதக்கும்பம், அபய, வரத முத்திரைகளுடன் பொன் பொழியும் குடந்தனை கரத்தில தாங்கி மறுகரத்தால் தம்மைத் தழுவும் ஆதிசக்தியான சர்வ சக்தி வாய்ந்த புன்முறுவர் பூத்த முகத்தினனாய் பொற்குடம் வைத்திருக்கும் சுவர்ணதா என்னும் அஜாமிளா தேவியை ஒரு புறத்துத் துழுவியவர் என்று விளிக்கிறது. சிவசக்தி வடிவில் உள்ள ஸ்ரீ சொர்ணாகர்சன பைரவரை உள்ளன்போடு வணங்கி வர சகல செளபாக்கியங்களும் தானாய் இல்லம் வந்து சேரும் என்று ஸ்ரீதேவி மாாத்மியம் கூறுகிறது.
சொர்ணாகர்சன பைரவ மந்திரம்
ஓம் ஜம் ச்லாம் க்லீம் கலும்
ஹ்ராம் ஹரீம் ஹ்ரூம் ஸகவம்
ஆபதோத்தாரனாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய சுவர்ணாகர்சன பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷனாய
ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் பொற்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தினுள்ளே எழுந்தருளியுள்ள பைரவர் சுவர்ணாகர்சன பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
உற்சவத்திருமேனியாக உள்ள இப்பைரவப் பெருமான் நிர்வாண கோலத்தில் நின்றவாறு மேற்கரங்களில் பாசம், டமருகமும், கீழ்கரங்களில் சூலம், கபாலமும் மேல்நோக்கிய அக்னி கேசத்துடன் அவருடைய இடப்பாகத்தில் அடியார்களை நோக்கியவாறு உள்ள நாய் வாகனத்துடன் திருக்காட்சியளிக்கிறார்.
இவருக்கு இங்கே உச்சிக்காலத்தில் நெய், பால், பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து நெய்யில் செய்யப்பட்ட வடைகளை மாலையாக அணிவித்து அர்ச்சனை செய்விக்கிறார்கள்.
முற்காலத்தில் தில்லை வாழ் அந்தணர்களான தீட்சதர்கள் தங்களுக்கென்று எவரிடமும் பொன்னோ, பொருளோ பெறுவதில்லை. அவர்கள் இரவு அர்த்தசாம பூஜை முடிந்தவுடன் செம்பினால் உருவாக்கிய தாமரை மலரைப் பைரவரின் பாதங்களில் வைத்து வணங்கிவிட்டு சென்றுவிடுவர். மறுநாள் காலை வந்து பார்க்க அந்த செப்புத் தாமரை சுவர்ணத்தாமரையாக அவர்களது பணிக்கான பலனுக்கேற்ப மாறி இருக்குமாம். பின்அதை விற்று அந்தப் பணத்தில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வார்களாம்.
சுவர்ணாகர்சன மந்திரம்
ஸ்வர்ணகால பைரவம் திரிசூலயுக்த பானினம்
வேத ரூப ஸார மேல ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரிதேஷூ ஸர்வதா ஸமஸ்த்வஸ்து தாயினம்
மகீந்த்ரீவம்ச பூர்வ புண்ய ரூபிஸம் ஸமாச்ரயே
சுவர்ணாகர்சன பைரவரை வழிபட வளர்பிறை அஷ்டம், பெளர்ணமி, பிரதோஷகாலம், திங்கட்கிழமை சந்தியாகாலம், திருவாதிரை நட்சத்திர நாள் உகந்த நாட்கள்.




சம்பங்கி மாலை, தாமரைப் புஷ்பமாலை, வில்வமாலை, தும்பைப்பூ மாலை, சந்தனமாலை, அணிவித்து வாசனை மலர்களாலும் செவ்வரளி, ரோஜா மஞ்சள் செவ்வந்தி, மரு, மரிக்கொழுந்து, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். மல்லிகை மலரை பைரவ வழிபாட்டில் தவிர்க்கவும்.
நைவேத்தியமாக வெல்லப் பாயசம், சர்க்கரைப்பொங்கல், நெய்யில் சுட்ட வடை, அவல் பாயாசம், பானகம், சம்பா அரிசிச் சாதம், பழங்கள், தேன், பால் படைத்து வழிபாடு செய்ய அனைத்து வளங்களும் இல்லம் தேடி தானாய் வரும்.
சுவர்ணாகர்சன பைரவரை வழிபட விரும்புபவர்கள் இவரது திருவுருவப் படத்தை குபேரனின் திசையான வடக்கு திசையில் வைத்து, வடக்கு  நோக்கி அமர்ந்து பூஜிக்க சர்வ தனங்களையும் ஆகர்சித்து வழங்குவார்.
சுவர்ணாகர்சன தியான சுலோகம்
காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசூலம் வரம் கைரை:
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த சுவர்ணவர்ஷனம்
சுவர்ணாகர்சனம் பைரவம்
ஆஸ்ரயாம்யஹம்.
நன்றி ! http://www.tamilvanan.com

No comments: