Saturday, May 7, 2011


ஸ்ரீ பைரவர் ஸ்லோகம்



இத்தகைய  ஸ்லோகங்களை தினமும் சொல்வதால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை இந்த ஸ்லோகங்கள்.
ஆனால் இவற்றைத் துதிக்கும் முன் கிழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பூரண பலன் கிட்டும்.
1. இவற்றைத் துதிப்பவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
2. தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் வழிபட வேண்டும்.
3. புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக மிக அவசியம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் கிடைப்பது உறுதி.
5. மந்திரங்களை சரியாக உச்சரிக்க இயலாதவர்கள் குருமார்கள் மூலம் சரியான உச்சரிப்பைக் கேட்டறிந்து  அதன் படி செல்லி வர வேண்டும்.
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!  
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்  
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
ஸ்ரீ பைரவ த்யானம் ::
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம்

No comments: