Friday, February 4, 2011

வேண்டியதை அருளும் காலபைரவ வடுகநாதர்




குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதர்


'காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லை என்றால்குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின்சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர்என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின்காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசிமாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்துவருபவர்- அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும்பக்தர்கள் திரும்பும்போது, அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்திபெறும் என்று புராணம் சொல்கிறது.
பொருளாதார ரீதியாக காசிக்குச் செல்வது என்பது எல்லோருக்கும் இயலாதஒன்று. எனவேதான், வசதி உள்ள அன்பர் கள் பைரவரை தரிசிக்க விருப்பம்கொண்டால் காசிக்குப் போகலாம்... வசதி இல்லாத அன்பர்கள், நம்தமிழகத்திலேயே உள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்துபலன் பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.
பைரவர் என்பவர், சிவனின் அம்சம். «க்ஷத்திரங்களை இவர் காப்பதால், «க்ஷத்திரபாலகர் என்றும் அழைக்கப் படுகிறார். நான்கு வேதங்களே நாய்வடிவில் பைரவருக்குக் காவலாக இருக் கின்றன. 64 வேறுபட்டவடிவங்களில் பைரவர் திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள்.




பைரவரை வழிபட்டால் அனைத்து வளங்களும் கிடைக்கும். பொன்னும்பொருளும்
மன அமைதியும் மகிழ்ச்சியும் இவரை வழிபட்டால், கிடைக்கக் கூடிய சிலசெல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள் ஒருவ ரான கொங்கணர், பைரவரைவழிபட்டு அட்டமாஸித்திகளை அடைந்தார். செம்பைத் தங்கமாக்குதல்,எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத்தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்துவிளங்கியதற்கு ஸ்ரீபைரவரின் அருளே பிரதான காரணம்!

பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு. அப்போதுபிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான்முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்கவேண்டும்). திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாகவிளங்கியதா லும், ஐந்து தலைகளுடன் அவதரித்ததாலும் லோகரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு,தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும்என்றும் உத்தரவிட்டார். இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர்தேவர்கள். சினம் கொண்டார் சிவபெருமான். பிரம்மனின் செருக்கை அடக்கத்தீர்மானித்தார். தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின்தலைகளில் ஒன்றை கிள்ளி வரும்படி ஆணை இட்டார். வீராவேசத்துடன்புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒருதலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார். இந்த பைரவர் அம்சமேவடுகதேவர் ('வடுகன்' என்றால் பிரம்மச்சாரி). புராணத்தில் சொல்லப்பட்டதகவல் இது.





குண்டடத்துக்கு வருவோம். இங்குள்ள பைரவரின் திருநாமம்- ஸ்ரீகாலபைரவ வடுகநாத ஸ்வாமி. இங்கு உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம் இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம்- விசாலாட்சி. என்றாலும் பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக் கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்து வருகிறது. கலியுகத்தில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தி, பக்தர்களைத் தன்பால் ஈர்த்து வருகிறார் இந்த காலபைரவ வடுக நாதர்.
கோவை- மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது. கோவையில் இருந்து சுமார் 82 கி.மீ.! பல்லடம்- தாராபுரம் மார்க்கத்தில் இரண்டு ஊர்க ளுக்கும் நடுவில் இருக்கிறது குண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ.! தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு.




மகாபாரத காலத்திலேயே குண்டடம் சிறப்புற்று விளங்கியதாக புராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின் மேல் மோகம் கொண்ட தால், அவனைக் கொன்றான் பீமன். இது நிகழ்ந்த இடம்- குண்டடம். 'கொன்ற இடம்' என்பது பின்னாளில் குண்டடம் ஆகி விட்டது.
''பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது (மறைந்து வாழ்வது) குண்டடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி மரத்தின் பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்தான் அர்ஜுனன் (இதே நிகழ்வை வேறு சில ஊர்களோடும் தொடர்புபடுத்திச் சொல்வது உண்டு). இதனால் இந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் 'வில் காத்த விநாயகர்' என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் 1950-ஆம் வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து கைப்பிடி இல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின் எலும்பு கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்று சொல்கிறது.
தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்று பெயர். அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில் ஒரு வருடம் பேடி யாக இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம் முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய உதய நேரத் தில் அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம் சூரியநல்லூர் எனப்படுகிறது. இது, தாராபுரத்துக்கும் குண்டடத்துக்கும் நடுவே இருக்கிறது.





No comments: