Saturday, February 5, 2011

திருக்காரவாசலில் காட்சி தரும் மூன்று பைரவர்கள்


அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில், இந்த திருத்தலத்துக்கு வந்தாலே உங்களுக்கு நல்லகாலம் ஆரம்பம் தான் என்பதைச் சொல்லுவது போல காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே தரிசனம் செய்வதைக் காணலாம்.


காலையில் வணங்க வேண்டிய கா(லை) பைரவர், மதியம் வணங்க வேண்டிய உச்சிக்கால பைரவர், அர்த்த ஜாமத்தில் வணங்க வேண்டிய சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி விசேஷமானது. அதுவும் மூன்று பைரவர்களுக்கு நேர் எதிரில் மகாலக்ஷ்மி பார்த்துக் கொண்டே இருப்பதால் இவர்களை வணங்கினால் செல்வம் உங்களை சேரும்.

திருவாரூரிலிருந்து (14 கி.மீ.) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் திருக்காரவாசல் உள்ளது.

No comments: