Wednesday, January 25, 2012

சுவர்ண ஹர்சன பைரவர் கோவில்


உலகிலேயே முதன் முறையாக சுவர்ணஹர்சன பைரவருக்கு என்று தனிப் பெரும் ஆலயம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் 33 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலை அமைக்கப்படுவது விஷேசமான ஒன்று. இங்குள்ள பைரவரை வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் தங்க-வைர நகைகள் பெருகும்.

கடன் தொல்லை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நஷ்டம் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். மாணவ-மாணவிகள் ஞாபக சக்தியைப் பெற்று படிப்பில் சிறந்து விளங்குவர். விவசாயிகள் நல்ல விளைச்சல் பெறுவர்.

பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் திறமைப்பெற்று அடிமைத் தனத்தில் இருந்து விடுபடுவர். கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் பைரவர் அருளுடன் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை பெற்று சண்டை சச்சரவின்றி நிம்மதியாக வாழ்வர். இங்குள்ள சுவர்ணா கர்சனா பைரவரை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி நினைத்த காரியம் பலிக்கும்.

சகல தோஷங்களை நீக்குவதில் சுவர்ணா கர்சனா பைரவருக்கு நிகர் அவரே! இக்கோவில் கட்ட நிதி தருபவர்களுக்காக இங்கு நடைபெறும் சிறப்பு யாகங்கள், சிறப்பு பூஜைகளின் போது, அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பு யாகங்கள் செய்யப்படுகிறது. சுவர்ன ஹர்சன பைரவர் கோவில் உலகின் ஒரு அதிசய கோவில் மட்டுமின்றி, மாபெரும் புனித ஸ்தலமாக மாறுவது உறுதி என்கிறார்விஜய்சுவாமிஜி.

நன்றி !  மாலைமலர் !!


No comments: